நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 20 மே, 2012

காலடியில் 
விலகி இருக்கும் 
தண்டவாளங்கள் 
தூரமாய் பார்க்க 
நெருங்குவதாய்  தோன்றும்.. 
நம் பார்வை தெரியாத தூரத்தில் 
அவைகள் இணையலாம் என்ற 
நம்பிக்கை போதும்.. 
சோதித்துப்பார்த்து 
சம்பாதிக்கபோவது ஏமாற்றமெனில் 
ஏன் சோதிக்கவேண்டும்.. 
அவைகள் இணைந்திருக்குமென்ற 
நம்பிக்கையே போதும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக