நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 13 மே, 2012

இரண்டு எழுத்தோ 
மூன்று எழுத்தோ தான் இருக்கும்.. 
எப்படி முயற்சித்தும் 
எழுதிவிட முடியவில்லை 
உன் முத்தத்தையும்.. 
உனக்கான முத்தத்தையும்...

சில முத்தங்கள்
சரியாய் கவனிக்கும் முன்
சட்டென முடிந்து விடுகிறது..
சத்தத்துடன்..

நிதானமான முத்தங்களோ
சத்தமில்லாமல் தொடர்கிறது...
அதையும் மீறி
எழுதிவிடும் நோக்கோடு
இன்னொரு முறை முயன்றாலோ..
பேனா பேப்பரோடு
என்னையும் தொலைத்துவிட்டு
தேட வேண்டி இருக்கிறது...

உடல் முழுதும்
உதடுகள் நடத்தும்
ஊர்வல முத்தங்களோ
உஷ்ணக்காற்றாய் மட்டுமே
உணர முடிகிறது..

எப்படியும் எழுதி விடலாம்..
இரண்டேழுதோ
மூன்றேழுத்தோ தானே...
அதுவரை தொடரட்டும்
உன் முத்தங்களும்..
உனக்கான முத்தங்களும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக