நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 14 ஆகஸ்ட், 2017



Image may contain: 1 person, standing

தமிழை கொஞ்சம் கொஞ்சமாய்
செதுக்கி செதுக்கி
உனக்கான கவிதை சிலையை
செதுக்க முயலும் தேவதச்சனாய்
தடுமாறி நிற்கிறேன்...

உதிர்ந்த வார்த்தைகளை பொறுக்கி எடுத்து
கவிதையாய் கோர்த்து நீட்டுகிறாய்...
கள்ளி... நீ தேவதை என்பதால்
எல்லாமே வாய்க்கப்பெற்றிருக்கிறாயா....
எல்லாமே வாய்க்கப்பெற்றதால்
தேவதையானாயா??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக