உன்னை மட்டும்
சந்திக்காமல் போயிருந்தால்
நிச்சயம் எனக்கு
மாலை மரியாதை எல்லாம்
கிடைத்திருக்கும்..
மேடையில் ஏற்றியோ...
இல்லை...
தலைமாட்டில்
அகல் விளக்கு ஏற்றியோ...!!
உன்னை
விபரம் தெரிந்தவளாய் ஆக்கவே
நான் சிந்திப்பதை
நிறுத்தி விட்டேன்...
உன்னை விலகி விடாதிருக்க
என் கோபங்களை
விலக்கி விட்டேன்....
உன்னில் கலந்துவிட்டு
தற்கொலையை தவிர்த்துவிட்டேன்..
உன்னை மட்டும்
சந்திக்காமலிருந்திருந்தால்..
என் சிந்தனைகள்
என்னை மேடையிலேற்றி
இருக்கலாம்..
என் கோபங்கள்
ஒரு தற்கொலைக்கோ
கொலையாகவோ தூண்டி இருக்கலாம்...
ஆனாலும்
இந்த சராசரி வாழ்க்கை
நகர்கிறது..
உன்னுடன்..
உன்னில் கலந்து..
உன்னில் கரைந்து..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக